என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Thursday, August 31, 2006

மஞ்சள் பாதை.


மஞ்சள் பூக்கள் நிரம்பி வழிகின்ற பாதையின் நடுவே நாம் நடக்கிறோம். மாலை நேரப் பொன்னொளி இலைகளின் இடுக்குகளில் நுழைந்து நிறைக்கிறது.

எங்கிருந்தோ வருகின்ற , மெல்லிய தென்றல் நம்மையும் தடவிச் செல்கின்றது. லேசான குளிர் அடிக்கின்ற நேரத்தில் கோர்த்துக் கொண்ட விரல்களோடு நடக்கிறோம்.

உன் ஆடையின் நுனிகளிலிருந்து சொட்டுகின்ற மென்னொளியைக் குடித்துக் கொண்டே நடக்கிறது, என் நிழல்.

நம்மிடையே பூத்திருக்கும் மெளனப் பானையை கொத்திக் கொத்தி உடைக்கின்றன, சிட்டுக்குருவிகளின் கீச்சுக் கீச்சுக் குரல்கள்.

0 Comments:

Post a Comment

<< Home