என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Saturday, August 04, 2007

நன்றி.

இப்பதிவின் தொடர்ச்சி எனது முதன்மைப் பதிவிலேயே தொடர்கின்றது. தங்கள் நல்வரவை எதிர்பார்க்கிறேன்.

http://kaalapayani.blogspot.com

Tuesday, September 12, 2006

பாப்லோ நெரூதா (Pablo Neruda)

I can write the saddest poem of all tonight.

Write, for instance: "The night is full of stars,
and the stars, blue, shiver in the distance."

The night wind whirls in the sky and sings.

I can write the saddest poem of all tonight.
I loved her, and sometimes she loved me too.

On nights like this, I held her in my arms.
I kissed her so many times under the infinite sky.

She loved me, sometimes I loved her.
How could I not have loved her large, still eyes?

I can write the saddest poem of all tonight.
To think I don't have her. To feel that I've lost her.

To hear the immense night, more immense without her.
And the poem falls to the soul as dew to grass.

What does it matter that my love couldn't keep her.
The night is full of stars and she is not with me.

That's all. Far away, someone sings. Far away.
My soul is lost without her.

As if to bring her near, my eyes search for her.
My heart searches for her and she is not with me.

The same night that whitens the same trees.
We, we who were, we are the same no longer.

I no longer love her, true, but how much I loved her.
My voice searched the wind to touch her ear.

Someone else's. She will be someone else's. As she oncebelonged to
my kisses.
Her voice, her light body. Her infinite eyes.

I no longer love her, true, but perhaps I love her.
Love is so short and oblivion so long.

Because on nights like this I held her in my arms,
my soul is lost without her.

Although this may be the last pain she causes me,
and this may be the last poem I write for her.

Tuesday, September 05, 2006

உன் முகம் தொட்டு...!


உன் முகம் தொட்டு வழித்துக் கொண்ட வெட்கம் நிறைந்த என் கைகளை என்ன செய்வது? முத்தமிட்டு ஒற்றிக் கொள்! உன் உதடுகள் இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்!

உன் வழி பார்த்துக் கருத்த என் விழிகளை நான் என்ன செய்வது? எடுத்துப் பூசிக் கொள்! உன் கூந்தல் இன்னும் கொஞ்சம் சிவக்கட்டும்!

காற்றோடு தேடிப் போய், என் காற்சட்டையில் நான் சேர்த்து வைத்திருக்கும் உன் கொலுசொலிகளை நான் என்ன செய்வது? உன் வார்த்தைகளுக்கு வர்ணமிட்டுக் கொள்! உன் குரல் இன்னும் கொஞ்சம் இனிக்கட்டும்!

என் கனவுகளில் வந்து கையசைத்துப் போன, உன் வளையொலிகளை நான் என்ன செய்வது? வந்து வாங்கிக் கொள்! என் கனவுப்பை காலியாகட்டும்!

உருத் தெரியா முன்னிரவில், உன் உள்ளங்கை ரேகைகளில், ஒளிந்து கொண்ட என் விரல்களை என்ன செய்வது? ஒடித்துக் கொள்! என் கைகளின் கொம்புகள் உடைந்துப் போகட்டும்!

உனக்காகப் பூத்திருக்கும் மலர்களைப் பூஜைக்கு அனுப்பாதே! தெய்வங்களும் துயர்படட்டும்!

வெயில் சாயுங்கால வேளையில், வானத்தின் சாயமாலையில், வர்ணங்களை எடுத்து, பூசிக் கொள்! மழையும் கொஞ்சம் நிறமிழக்கட்டும்!

உன் சிரிப்புகளால் நிறைந்திருக்கும் என் இதயத்தை வாங்கிக் கொள்! அது துடிப்பதிலிருந்து விடுதலை பெறட்டும்!

உனக்காகத் தள்ளி வைத்திருக்கும் என் இறப்பை, உடனடியாக உணர்ந்து கொள்! எது மறந்து போய் விடினும், என் நினைவாவது கொஞ்சம் இருக்கட்டும்...!

எழுதியது : 27.Sep.2004

உன்னோடு...!


உன்னோடு கொஞ்சம்
பேச வேண்டும்,
கிடைக்குமா தனிமை?
நீயும், நானுமற்ற தனிமை!

பேச்சில் கொஞ்சம்
பருக வேண்டும்,
இருக்குமா வெறுமை?
வார்த்தைகளும், வசனங்களுமற்ற வெறுமை!

வெறுமையில் கொஞ்சம்
வசிக்க வேண்டும்,
அமையுமா இனிமை?
ஆசைகளும், ஓசைகளுமற்ற இனிமை!

தனிமையில் கொஞ்சம்
தரிக்க வேண்டும்,
தகையுமா மெளனம்?
சப்தங்களும், அமைதியுமற்ற மெளனம்!

எழுதியது : 02.Mar.2004

பாடுகிறேன்...!


அலையொதுக்கும் நுரையொதுங்கும் ஆற்றங்கரையோரம்
அழகான நிலவுதிக்கும் அந்தி மாலை நேரம்
ஆசைமனம் வாடுதடி ஆரும் சொல்லலியா? என்
ஆவல் எல்லாம் தூது விட்டேன், அன்பைச் சொல்லலியா?

கருக்கலிலே இருள்கவிழ்ந்து கருகும்முனு ஆச்சு,
வருத்துகின்ற புயலெல்லாம் உன் வாச மூச்சு!
செருக்கழிந்த வாழையெல்லாம் செதில்செதிலாய்ப் போச்சு,
செத்திருந்த புஞ்சை நிலம் செவச்செவனு ஆச்சு!

ஓடொழுகும், வீடொழுகும், ஓசையோடு சேர்ந்தொழுகும்,
பாடுகின்ற பறவையெல்லாம் பதுங்கப் பதுங்க இசையொழுகும்!
ஓடிவந்த வெள்ளமெல்லாம் ஓடையோடு சேர்ந்திருக்க,
ஒதுங்கி நிற்பதேனடி, நீ ஒளிந்து கொள்வதேனடி..!

திண்ணையெல்லாம் ஈரமாச்சு, திசையெல்லாம் சாரலாச்சு,
தீயாக உன் நினைப்பு குளிர்காய வரலாச்சு!
முற்றமெல்லாம் நீர் தேங்க, முன்பார்த்த நினைவாக,
முத்தமிடும் என் மனசு, முழுதாகப் பழுதாக...!

மின்னலிங்கு சிரிப்பாக, மிச்சமெல்லாம் நெருப்பாக,
பின்னலிட்ட கோலமயில், பிரிந்து நிற்பதேனடி?
விளக்கொண்ணு ஏத்தி வெச்சேன், விடியலின் துளியாக,
விளங்கலையே உன்மனசு, விளக்கமேதுமுண்டோ?

புளியமரப் பேயாக புரண்டாடும் மனசடங்க,
பூக்களெல்லாம் வேண்டாம், உன் புன்னகையே போதும்.
கலிமனுஷச் சதியாக, கதை முடியும் நேரத்தில்
கவிதையெல்லாம் வேண்டாம், உன் கண்ணிமையே போதும்!

சில நேரம் சிலையாக, சில நேரம் உலையாக,
சிந்துகின்ற பார்வையில் உடல் சிக்கிப் போகும்!
மழை நனைத்த பாதங்கள், மண்ணில் போடும் கோலங்கள்
மணம் கொஞ்சம் வீசும், என் மனதோடு பேசும்!

மேகமெல்லாம் மழையாச்சு, மண்ணோடு சேர்ந்தாச்சு,
மேற்குத்திசை ஒளியெல்லாம் மெல்ல மெல்ல மறைஞ்சாச்சு,
கதவடைக்கும் பொழுதாச்சு, கருங்குயிலும் களைச்சாச்சு,
மனசடைக்க முடியலையே, மருகிமருகிப் பாடுகிறேன்...!!

எழுதியது : 08.Sep.2003

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு - I


வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
போகுமிடம் எல்லாமே
கூடக்கூட வந்தாய்

வெண்ணிலவே
வெள்ளி வெள்ளி நிலவே
நட்சத்திரப் பட்டாளம்
கூட்டிக் கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
மெல்லப்பயங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே

அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே.... (வெண்ணிலவே)


பூலோகத்தின் கடைசி நாள்
இன்றுதானோ என்பதுபோல்

பேசிப் பேசித் தீர்த்தபின்னும்
ஏதோவொன்று குறையுதே

உள்ளெவொரு சின்னஞ்சிறு
மரகத மாற்றமொன்று

குறுகுறு மின்னல் என
குறுக்கே ஓடுதே... (வெண்ணிலவே)


மஞ்சள் வெயில் மாலையிதே
மெல்ல மெல்ல இருளுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே
மெல்லப்பயங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே

அடுத்தது என்ன என்ன
என்றே தான் தேடுதே....

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில்
சிலர் நடக்கிறார் நடக்கிறார்

மஞ்சளும் பச்சையும் கொண்டு
பெய்யுது பெய்யுது
மழை நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்
யாரோ யாரோ யாரோ அவன்

ஒருகோடும் ஒருகோடும் ஒட்டிக் கொள்ள
இரு தண்டவாளம் முட்டிச் செல்ல... (வெண்ணிலவே)


இன்னும் கொஞ்சம் நீள வேண்டும்
இந்த நொடி இந்த நொடி

எத்தனையோ காலம் தள்ளி
நெஞ்சோரம் பனித்துளி

நின்று பார்க்க நேரமின்றி
சென்று கொண்டே இருந்தேனே

நிற்க வைத்தாள் பேச வைத்தாள்
நெஞ்சோரம் பனித்துளி

வேட்டையாடு விளையாடு - II


பார்த்த முதல் நாளே
உன்னை
பார்த்த முதல் நாளே

காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன்
காட்சிப் பிழை போலே

ஓர் அலையாய் வந்து எனையடித்தாய்
ஒரு கடலாய் வந்து எனை இழுத்தாய்

என் பதாகை தாங்கிய
உன் முகம்
உன் முகம்
என்றும் மறையாதே....

காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே
காட்டிக் கொடுக்கிறதே

காதல் வழிகிறதே
கண்ணில்
காதல் வழிகிறதே

உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை

உன் அலாதி அன்பினில்
நனைந்த பின்
நனைந்த பின்
நானும் மழையானேன்....


காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப் பிடிப்பதுந்தன் முகமே

தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசிக்
காட்சிக்குள் நிற்பதுந்தன் முகமே

எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்

உனையேதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டுமென்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்

சரியென்று சரியென்று உனைப் போகச்சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்..... (காட்டிக்)

உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தால்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்

தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிலவீடு கட்டிக்கொள்ள தோன்றும்

நீயும் நானுமங்கே வாழ்கின்ற வாழ்வை
மரந்தோறும் செதுக்கிடத் தோன்றும்

கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்

கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்........ (பார்த்த)

வேட்டையாடு விளையாடு - III



உயிரிலே எனது உயிரிலே
ஒருதுளி தீயை உதறினாய்

உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே.... (உயிரிலே)


அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே

நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு

நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு

இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா

உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக

என்ன செய்வேனோ...? (உயிரிலே)


ஏதொ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே

என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே

விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே

வா வந்து என்னை சேர்ந்திடு
எந்தன் தோள்களில் தேய்ந்திடு

சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்

வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்....... (உயிரிலே)

Thursday, August 31, 2006

நீ..?


கொத்திக் கொத்திச்
செதுக்கிய
என் இதயத்துக்குள்
குடியேறும்,
சின்னக்குருவியா நீ..?

காதலுக்குள்.


விழித்திருக்கையில்
தூக்கிக் கொண்டு
அலைகிறேன்,
உறங்கையிலோ
சுருண்டு
படுத்துக் கொள்கிறேன்,
உன் காதலுக்குள்.

எனதா, உனதா ?


'நமது'
என்பேன்
என எதிர்பார்த்து,
'இந்த இதயம் எனதா, உனதா'
என
நீ கேட்ட கேள்விக்கு,
'உனது' என்றேன்,
எனது என்று
எதுவும்
இல்லை
என்றான பின்பு.

மஞ்சள் பாதை.


மஞ்சள் பூக்கள் நிரம்பி வழிகின்ற பாதையின் நடுவே நாம் நடக்கிறோம். மாலை நேரப் பொன்னொளி இலைகளின் இடுக்குகளில் நுழைந்து நிறைக்கிறது.

எங்கிருந்தோ வருகின்ற , மெல்லிய தென்றல் நம்மையும் தடவிச் செல்கின்றது. லேசான குளிர் அடிக்கின்ற நேரத்தில் கோர்த்துக் கொண்ட விரல்களோடு நடக்கிறோம்.

உன் ஆடையின் நுனிகளிலிருந்து சொட்டுகின்ற மென்னொளியைக் குடித்துக் கொண்டே நடக்கிறது, என் நிழல்.

நம்மிடையே பூத்திருக்கும் மெளனப் பானையை கொத்திக் கொத்தி உடைக்கின்றன, சிட்டுக்குருவிகளின் கீச்சுக் கீச்சுக் குரல்கள்.

சாத்தானா?

உன்
இதழைச் சுவைக்கும்
ஆப்பிளை அனுப்பியது,
மறுபடியும்
அதே சாத்தானா..?

எங்கே நடந்தன..?

உன் விரல்
தீண்டும்
மயக்க நொடிகளில்,
மண்ணில் பதியாத
இந்தக் கால்கள்
எங்கே
நடந்தன..?

உன் சிரிப்பில்
நனைகின்ற
பார்வைகள்,
கண்களில்
எங்கே
கரைகின்றன?

நிழல்...!


நடக்கையில்
உன் நிழலாக வேண்டும்
என்ற
என் வேண்டுதலை
தவிர்க்கச் செய்கிறது,
இருளில்
காணாமல் போகின்ற
உன் நிழல்...!!

இதுவரை!

இதுவரை சொன்ன
வார்த்தைகளில் மட்டுமல்ல,
இன்னும்
சொல்லப் போகும்
வார்த்தைகள் மேலும்
காத்திருக்கிறது
காதல்...!

உளவு!

நம் காதலை
எட்டிப்
பார்ப்பதற்கே
கீற்றுகளைக்
கிழித்து வருகிறது,
நிலவொளி...!!

சறுக்கி...!


சின்னப் பூக்கள்
தீண்டும்
உன் கூந்தலில்
சறுக்கி
விளையாடுகிறது
என் மனம்...!

மாலை!


நான்
தொடுகையில்
நீ கொண்ட
வெட்கத்தை
அள்ளிப்
பூசிக் கொண்டது
பொன்மாலை..!