என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Friday, September 01, 2006

வேட்டையாடு விளையாடு - III



உயிரிலே எனது உயிரிலே
ஒருதுளி தீயை உதறினாய்

உணர்கிறேன் எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்

ஏன் என்னை மறுத்துப் போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்

கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே.... (உயிரிலே)


அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே

நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு

நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு

இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா

உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக

என்ன செய்வேனோ...? (உயிரிலே)


ஏதொ ஒன்று என்னைத் தடுக்குதே
பெண்தானே நீ என்று முறைக்குதே

என்னுள்ளே காயங்கள்
ஆறாமல் தீராமல் நின்றேனே

விசிறியாய் உன் கைகள்
வந்தாலும் வாங்காமல் சென்றேனே

வா வந்து என்னை சேர்ந்திடு
எந்தன் தோள்களில் தேய்ந்திடு

சொல்ல வந்தேன்
சொல்லி முடித்தேன்

வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்....... (உயிரிலே)

0 Comments:

Post a Comment

<< Home