என்னைத் தீண்டிச் சென்ற தென்றல்களின் ஸ்பரிசங்களால் எனக்குள் எழுந்த சிலிர்ப்புகள், கவிதைகளாய்....!!!!

Tuesday, September 05, 2006

உன்னோடு...!


உன்னோடு கொஞ்சம்
பேச வேண்டும்,
கிடைக்குமா தனிமை?
நீயும், நானுமற்ற தனிமை!

பேச்சில் கொஞ்சம்
பருக வேண்டும்,
இருக்குமா வெறுமை?
வார்த்தைகளும், வசனங்களுமற்ற வெறுமை!

வெறுமையில் கொஞ்சம்
வசிக்க வேண்டும்,
அமையுமா இனிமை?
ஆசைகளும், ஓசைகளுமற்ற இனிமை!

தனிமையில் கொஞ்சம்
தரிக்க வேண்டும்,
தகையுமா மெளனம்?
சப்தங்களும், அமைதியுமற்ற மெளனம்!

எழுதியது : 02.Mar.2004

1 Comments:

Blogger Divya said...

மிகவும் அருமை:))

11:08 AM

 

Post a Comment

<< Home